How would like to contact us?

கர்த்தரின் பெரிதான கிருபையால் எங்கள் ஊழியத்தின் மூலமாய் கட்டப்பட்ட 10-வது ஆலயம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவரை வெவ்வேறு மிஷினரி இயக்கங்களுக்கு 10 ஆலயங்களை கட்டிக்கொடுத்துள்ளோம் (இதில் ஒன்றும் எங்களது கிளைச்சபை அல்ல). இவ்வாலயம் Rev. Dr. ஜான் வெஸ்லி பொன்னையா அவர்களின் இயேசுவின் மந்தை மிஷினரி ஊழியத்திற்காய் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காய் உதவி வருகிற அன்பு உள்ளங்களுக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவிக்கிறேன். எங்களோடு சென்னையிலிருந்து சகோ. நஸ்ரேன் லாரன்ஸ், சகோ. கிங்ஸ்லி விஜய், சகோ. பிரேம்ஜித், சகோ. ஸ்டாலின், சகோ. ஜேசுதாஸ், சகோ. P. T. டேனியல், சகோ. ராஜன் ஐசக், சகோ. அலன் ஆகியோர்கள் எங்களோடு கூட வந்து நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்னும் அநேக ஆலயங்களை, ஆலயமில்லாத இடங்களில் கட்ட ஜெபியுங்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.